தாகூர் கலைக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்
தாகூர் கலைக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி : தாகூர் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் ராமபிரபு தலைமை தாங்கினார்.புதுவை பாரதீய ஆதிம் ஜாதி சேவா சங்கத்தின் திட்ட ஒருங்கிணைப் பாளர் மதனகோபால், எய்ட்ஸ் நோய் பரவும் விதங்கள் குறித்தும், அந்நோயில் இருந்து இளைஞர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து பேசினர்.நிகழ்ச்சியில் சமூக சேவகர்கள் மாஸ்கோ, முகுந்தன், சிவக்குமார் ஆகியோர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
Topics :
Advertisement
Advertisement
Advertisement